No results found

    அரியலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


    அரியலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5 சதவீத ஊதிய உயர்வு, உயர்த்தப்பட்ட ஊதியம் , மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை பிடித்தம் செய்ய பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.கே.ஷேக் தாவூத், மாவட்டத் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க செயற்குழு உறுப்பினர் சூர்யா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال